உள்ளூர் செய்திகள்

பொதுமக்களிடம் துணை தாசில்தார் கிருஷ்ணா பேச்சுவார்த்தை நடத்திய காட்சி.

பண்ருட்டி தாசில்தார் அலுவலகம் முன் கிராம மக்கள் திரண்டதால் திடீர் பரபரப்பு

Published On 2023-03-01 09:50 GMT   |   Update On 2023-03-02 06:43 GMT
  • இந்த கோவில்வளாகத்தில் சமூகவிரோத செயல் நடைபெறுவதாக கூறிஅதனை தடுப்பதற்காகதடுப்புவேலிஅமைத்திருந்தனர்.
  • .இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது

கடலூர்:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியம்நடுக்கா ட்டுபாளையத்தில் மதுரை வீரன் கோவில் உள்ளது. இந்த கோவில்வளாகத்தில் சமூகவிரோத செயல் நடைபெறுவதாக கூறிஅதனை தடுப்பதற்காகதடுப்புவேலிஅமைத்திருந்தனர். இதனால் அதே ஊராட்சியைசேர்ந்த மேல்காட்டுபாளையத்திற்கு எளிதில் சென்று வர முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து சமரசம் பேசினர். இதில்உடன்பாடு ஏற்பட்டு மேல் காட்டுபாளையத்திற்கு

செல்ல வழி ஏற்படுத்தப்பட்டது . இந்த வழி மட்டும் போதாது கோவிலை சுற்றி அமைக்கப்பட்டு ள்ள தடுப்பு வேலிகளை முழுமை யாக அகற்ற வேண்டும் என்று ஒரு தரப்பினர் கோரி வந்தனர்  இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதனை தொடர்ந்து இன்று காலை நடுக்காட்டு பாளையத்தை சேர்ந்த கிராம மக்கள் பெண்கள், இளைஞர்கள், பண்ருட்டி வருவாய் தாசில்தார் அலுவலகம் முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்- இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தாலுகா அலுவலகத்திற்கு விரைந்து சென்றனர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் பின்னர் பொதுமக்கள் பண்ருட்டிதலைமை இடத்து துணை தாசில்தார் கிருஷ்ணாவிடம் மனு கொடுத்தனர். தாசில்தார் அவசர வேலையாக வெளியில்சென்றுள்ளார். அவர்வந்தவுடன் 5 பேர் மட்டும் வாருங்கள் பேசிக்கொள்ளலாம் என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து நடுக்காட்டு பாளையம் கிராம மக்கள் கலைந்து சென்றனர் .இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது

Tags:    

Similar News