உள்ளூர் செய்திகள்
பேக்கரி கடைக்காரர் தூக்குபோட்டு தற்கொலை
- கோவிந்தராஜ் அதேபகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதால் அதனை சந்திரம்மா தட்டிகேட்டதாக தெரிகிறது.
- மனவேதனை அடைந்த கோவிந்தராஜ் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே பனையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது45). இவர் அதே பகுதியில் பேக்கரி கடை நடத்தி வந்தார். இவரது மனைவி சந்திரம்மா (45). இந்த நிலையில் கோவிந்தராஜ் அதேபகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதால் அதனை சந்திரம்மா தட்டிகேட்டதாக தெரிகிறது.
இதனால் மனவேதனை அடைந்த கோவிந்தராஜ் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அஞ்செட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.