உள்ளூர் செய்திகள்
கொடைக்கானலில் வனஉயிரின வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
- வனஉயிரின வாரவிழாவை முன்னிட்டு ஏரிச்சாலையில் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட சைக்கிள் பேரணி நடைபெற்றது.
- மாணவ-மாணவிகளுக்கும் நினைவு பரிசுகளும், வெற்றிபெற்றவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டது.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் வனத்துறை சார்பில் வனஉயிரின வாரவிழாவை முன்னிட்டு ஏரிச்சாலையில் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட சைக்கிள் பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட வனஅலுவலர் திலீப், கொடைக்கானல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி கார்த்திக், கோட்டாட்சியர் ராஜா, புதுச்சேரி மாநில வனஅலுவலர் வஞ்சுனாவள்ளி, கொடைக்கானல் நகர்மன்ற தலைவர் மாயக்கண்ணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
வனஉதவி பாதுகாப்பு அலுவலர் சக்திவேல், அன்னைதெரசா பல்கலைக்கழக மாணவிகள், அரசு கலைக்கல்லூரி மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பேரணி நிறைவில் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் நினைவு பரிசுகளும், வெற்றிபெற்றவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டது.