உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு பேரணியை கோட்டாட்சியர் அர்ச்சனா தொடங்கி வைத்தார்.

சீர்காழியில், விழிப்புணர்வு பேரணி

Published On 2023-03-31 09:46 GMT   |   Update On 2023-03-31 09:46 GMT
  • முக்கிய வீதிகள் வழியாக சீர்காழி பழைய பஸ் நிலையத்தில் பேரணி முடிவடைந்தது.
  • பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

சீர்காழி:

சீர்காழியில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பாக போதைப் பொருட்கள் பயன்பாடு மற்றும் போதைப்பொருட்கள் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பேரணிக்கு சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார் தலைமை வகித்தார். சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் லாமெக், மாவட்ட கலால் துறை அலுவலர் ஹரிதரன், தேர்தல் துணை வட்டாட்சியர் ரஜினி, பெஸ்ட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி துணை முதல்வர் செல்வமுத்துக்குமாரசாமி, உதவி பேராசிரியர்கள் பிரவினா, பிரகாஷ், பேரணி ஒருங்கிணைப்பாளரும், அரிமா மாவட்ட தலைவருமான சக்திவீரன் முன்னிலை வகித்தனர்.

சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து துவங்கிய விழிப்புணர்வு பேரணியை வருவாய் கோட்டாட்சியர் உ.அர்ச்சனா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட பேரணி முக்கிய வீதிகள் வழியே சீர்காழி பழைய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.

போதை பொருள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags:    

Similar News