உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு பேரணி

Published On 2023-02-24 09:39 GMT   |   Update On 2023-02-24 09:39 GMT
  • சாரண, சாரணிய மாணவ, மாணவிகள் கொண்டாடினர்.
  • பேரணியை பள்ளியின் முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மத்தூர்,

பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் தந்தை ராபர்ட் டீவன்ஸன்மித் பேடன்பவல் பிறந்த பிப்ரவரி 22 -ம் தேதி உலக சிந்தனை தினமாக கொண்டாடப்படுகிறது.

இதனை ஊத்தங்கரை அதியமான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சாரண, சாரணிய மாணவ, மாணவிகள் கொண்டாடினர்.

இதில் நிறுவனங்களின் நிறுவனர்சீனி.திருமால் முருகன், செயலர் ேஷாபா திருமால் முருகன், நிர்வாக அலுவலர் சீனி.கணபதி ராமன், அதியமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் சீனி.கலைமணி சரவணகுமார் மற்றும் துணை முதல்வர் அபிநயா கணபதி ராமன் மற்றும் சாரண, சாரணிய ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் உலக சிந்தனை தினத்தையொட்டி நடைபெற்ற பேரணியை பள்ளியின் முதல்வர் சீனி.கலைமணிசரவணகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இப்பேரணியில் நேர்மறையான சிந்தனை களை வளர்ப்பது பற்றிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பள்ளி வளாகத்தில் ஊர்வலமாக சென்று மாணவ, மாணவி களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags:    

Similar News