ஜெ.எஸ்.எஸ் கல்லூரி சார்பில் பழங்குடியின பெண்களுக்கு விழிப்புணர்வு முகாம்
- 100க்கும் மேற்பட்ட பழங்குடி பெண்கள் கலந்து கொண்டனர்.
- விழாவில் பங்கேற்ற பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஊட்டி,
கோத்தகிரி அடுத்த சிறியூர் கிராமத்தில் பழங்குடியின பெண்களுக்கான மகப்பேறு மற்றும் மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதனை ஜெ.எஸ்.எஸ் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்குழுமம், புதுடெல்லி அறிவியல் தொழில்நுட்பத் துறை ஆகியவை ஒருங்கிணைந்து நடத்தியது. இதில் சுமார் 100க்கும் மேற்பட்ட பழங்குடி பெண்கள் கலந்து கொண்டனர்.கல்லூரி பேராசிரியர்கள் வடிவேலன், கவுரம்மா, கோமதி சானீஸ், தீபாலெட்சுமி ஆகியோர் கலந்துகொண்டு மாதவிடாய் மற்றும் மகப்பேறு ஆகியவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அதன்பிறகு விழாவில் பங்கேற்ற பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் தனபால், நிர்வாக செயலாளர் கோமதி சுவாமிநாதன், மருந்தாக்கவியல் வேதியியல் துறை தலைவர் காளிராசன் மற்றும் ஊர் தலைவர் சந்திரமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி நிர்வாக செயலாளர் பிரியங்கா நன்றி கூறினார்.