உள்ளூர் செய்திகள்

மக்களிடம் சுகாதாரத்துறையினர் தொழுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தொழுநோய் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு

Published On 2022-12-09 14:35 IST   |   Update On 2022-12-09 14:35:00 IST
  • மக்களிடையே தொழுநோய், தேமல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
  • நகரின் முக்கிய பகுதிக ளில் புகைமருந்து அடிக்கப்பட்டது.

முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த கள்ளிக்குடி கிராமத்தில், ஒருங்கிணைந்த நோய் தடுப்பு, தொழுநோய் விழிப்புணர்வு மற்றும் ஒட்டுமொத்த தூய்மை பணிகள் கடந்த மூன்று நாட்களாக துணை இயக்குநர் டாக்டர். ஹேமச்சந்த காந்தி உத்தரவி ன்படி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.

கிள்ளிவளவன் மேற்பார்வையில் நடைபெற்றது. இப்பணியை ஊராட்சி மன்ற தலைவர் கஸ்தூரி செந்தில் தொடக்கி வைத்தார்.

இதில் கள்ளிக்குடி கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் தூய்மை காவலர்கள், மஸ்தூர் பணியாளர்கள், நூறுநாள் திட்ட பணியாளர்கள் ஆகியோர் தேவையற்ற, டயர், பிளாஸ்டிக், பானை போன்ற பொருட்களை கண்டறிந்து ஒட்டு மொத்தமாக வண்டிகள் மூலம் அப்புறப்படுத்தினர்.

மக்களிடையே தொழுநோய், தேமல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கீழத்தெரு உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் புகைமருந்து அடிக்கப்பட்டது.

இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மனோகரன், வட்டார மருத்துவம் சாரா மேற்பா ர்வையாளர் கதிரேசன், சுகாதார ஆய்வாளர்கள் பழனியப்பன், ராஜ்குமார், கதிரவன், பால சண்முகம், விக்னேஷ், ஊராட்சி செயலாளர் கவிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், இப்பணியை மாவட்ட பூச்சி இயல் அலுவலர் சிங்காரவேலு ஆய்வு செய்தார். மேலும், பல்வேறு பகுதிக்கு சென்று மக்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Tags:    

Similar News