உள்ளூர் செய்திகள்

சிறுவர்களிடம் வாகனங்களை ஓட்ட விடக்கூடாது.

ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு

Published On 2023-06-25 09:15 GMT   |   Update On 2023-06-25 09:15 GMT
ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும்.

அதிராம்பட்டினம்:

பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரித்திவிராஜ் சௌகான் உத்தரவின்படி அதிராம்பட்டினம் இராஜமடம் அண்ணா பல்கலைக்கழகம் அருகில் கடற்கரை சாலையில் ஜார்ஜ்ராஜ், குணசேகரன், ஐயப்பன், விமல், மதி ஆகிய போலீசார் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும். சிறுவர்களிடம் வாகனங்களை ஓட்ட விடக்கூடாது என்பது போன்ற பல்வேறு விழிப்புணர்வு அறிவுரைகளை வழங்கினர்.

Tags:    

Similar News