உள்ளூர் செய்திகள்

சமூக சேவை அமைப்புகளுக்கு விருது

Published On 2022-10-16 13:30 IST   |   Update On 2022-10-16 13:30:00 IST
  • விருது வழங்கும் விழா நடைபெற்றது.
  • அப்துல் கலாம் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மொரப்பூர்,

தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அருகே உள்ள கே.ஈச்சம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட ஈ.அக்ரஹாரம் கிராமத்தில் அப்துல்கலாம் 91-வது பிறந்தநாள் மற்றும் முதலாம் ஆண்டு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவில் டாக்டர் ஏ.பி. ஜே. அப்துல் கலாம் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இவ்விழாவில் கம்பைநல்லூர் போலீஸ்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார்,மொரப்பூர் போலீஸ்- இன்ஸ்பெக்டர் வசந்தா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சமூக சேவையில் ஈடுப்பட்டு வரும் சமூக சேவகர்கள் மற்றும் சமூக சேவை செய்துவரும் அமைப்புகளுக்கு கலாம் சிந்தனையாளர் விருது,கலாம் சுடர் விருது,கலாம் கல்வியாளர் விருது போன்ற விருதுகளை வழங்கினர்.

விழாவில் ராணுவவீரர் திருப்பதி,ஆசிரியர் நாகமணி, ஊத்தங்கரை அறம் விதை அறக்கட்டளை, போச்சம்பள்ளி சாகிப் பயிற்சி மையம் கார்த்திக் மற்றும் நிர்வாகிகள்,சுகாதார ஆய்வாளர் செழியன், பெரமாண்டப்பட்டி ஜெகநாதன், ஆசிரியர் ரவி,நவலை குப்புசாமி,நவலை துணைத்தலைவர் தேவிசங்கர், டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பசுமை தேசம் நற்பணி மன்றம் சின்னமணி, மனோ,கீர்த்தனா,சந்திரலேகா,உதயகுமார் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News