உள்ளூர் செய்திகள்

கைதான சரண்ராஜ். 

பண்ருட்டியில் கல்லூரி மாணவியை கடத்திய ஆட்டோ டிரைவர் போக்ேசாவில் கைது.

Published On 2023-02-11 13:23 IST   |   Update On 2023-02-11 13:52:00 IST
  • .எஸ்சி. நர்சிங்படித்து வருகிறார்.சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற அந்த மாணவி திடீரென மாயமனார்.
  • கரும்புதோட்டத்தில்பதுங்கி இருந்த ஆட்டோ டிரைவர்சரண்ராஜை சுற்றிவளைத்துபிடித்தனர்.

கடலூர்:

விழுப்புரம் அருகே உள்ளநரசிங்கபுரம் கிராமத்தை சேர்ந்த 16 வயது மாணவி பண்ருட்டியில் உள்ள தனியார் கல்லூரியில்பி.எஸ்சி. நர்சிங்படித்து வருகிறார்.சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற அந்த மாணவி திடீரென மாயமனார்.இதுகுறித்து மாணவியின்பெற்றோர், பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார்செய்தனர். அந்தபுகாரில், தங்களது மகள் பண்ருட்டி எல்.என்.புரம்அய்யனார் கோவில் வழியாக கல்லூரிக்கு சென்று வருவார்அப்போது அதேபகுதியை சேர்ந்த சரண்ராஜ் ( 22 ) என்பவர் ஆசைவார்த்தை கூறி கடத்திச்சென்றுவிட்டதாக கூறியிருந்தனர்.

அதன்பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர்தங்கவேலு ஆகியோர்வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட மாணவியையும், அவரை கடத்திச்சென்ற சரண்ராஜ் என்பவரையும் தேடி வந்தனர்.அதனை தொடர்ந்து பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா தனிப்படை அமைத்து விசாரணையை முடுக்கிவிட்டார்.அதன்படி சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேலு தலைமையி லானதனிப்படை போலீசார் விசாரரணை நடத்தினர். அப்போது 2 பேரும் தஞ்சையில் இருப்பது தெரிய வந்தது. உடனே பொலீசார் தஞ்சை விரைந்தனர்.அங்கு கரும்புதோட்டத்தில்பதுங்கி இருந்த ஆட்டோ டிரைவர்சரண்ராஜை சுற்றிவளைத்துபிடித்தனர்.விசாரணையில் சரண்ராஜ்க்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதும் தெரிய வந்தது. இது போன்று ஆட்டோ டிரைவர் பல பெண்களின் விளையாடியதும் தெரியவந்தது.இதனைத்தொடர்ந்து போக்சோவில் சரண்ராஜை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். கல்லூரி மாணவியை மீட்டு பண்ருட்டி அழைத்து வந்தனர்அதன்பின்னர் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர்வள்ளி, சப்.இன்ஸ்பெக்டர் சரண்யா ஆகியோர் கடத்தப்பட்ட கல்லூரிமாணவியிடம்விசாரணைநடத்தினர். பின்னர் மருத்துவபரிசோதனைக்கு உட்படுத்தி மகளிர் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News