உள்ளூர் செய்திகள்

காரைக்கால் அரசு என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் துணிகர கொள்ளை

Published On 2022-08-11 07:54 GMT   |   Update On 2022-08-11 07:54 GMT
  • காரைக்கால் அரசு என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் கொள்ளையடிக்கப்பட்டது.
  • 3 மின் விசிறிகள், காப்பர் ஒயர்கள், மரபலகைகள் மற்றும் செப்புப் பட்டைகள் திருடு போனது தெரிய வந்தது.

காரைக்கால்:

காரைக்காலை அருகே செருமாவிளங்கை பகுதியில் பெருந்தலைவர் காமராஜர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் உபயோகப்படுத்தாத விடுதி கட்டி டங்கள் பூட்டிக் கிடக்கின்றன. கட்டிடத்தை பழுது நீக்கும் எண்ணத்தில், கல்லூரி நிர்வாகம் அவ்வப்போது விடுதி பூட்டைத் திறந்து, துப்புரவு பணியை மேற்கொண்டுவந்தது. வழக்கம் போல் துப்புரவு பணி மேற்கொள்ள விடுதிக்குள் ஊழியர்கள் சென்றபோது, விடுதி பூட்டு உடைந்திருப்பது கண்டு, கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். இதுகுறித்து கல்லூரி முதல்வர் குமார் விடுதியில் ஆய்வு நடத்தியபோது, விடுதியிலிருந்து 3 மின் விசிறிகள், காப்பர் ஒயர்கள், மரபலகைகள் மற்றும் செப்புப் பட்டைகள் திருடு போனது தெரிய வந்தது. இதுகுறித்து, அவர் திருநள்ளாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் அறிவுச்செல்வன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து, கல்லூரி விடுதியில் காப்பர் மற்றும் மின்விசிறையை திருடிசென்ற மர்ம நபரை தேடிவருகின்றனர்.

Tags:    

Similar News