உள்ளூர் செய்திகள்

விஜய் மன்ற துணைத் தலைவரை வெட்டி கொல்ல முயற்சி,

Published On 2023-01-19 08:35 GMT   |   Update On 2023-01-19 09:52 GMT
  • பேனர் மீது அதேபகுதியைச் சேர்ந்த சிகாமணி மகன் சந்தோஷ் (18) என்பவர் கல்லை எரிந்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
  • சந்தோஷ் அரிவாளால் மாயவனின் கழுத்து மற்றும் இடது கையில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி அருகே தண்டலை கிராமத்தைச் சேர்ந்தவர் வேம்பு மகன் மாயவன் (வயது 42) இவர் விஜய் ரசிகர் மன்ற துணைத் தலைவராக உள்ளார். இந்நிலையில் இதே கிராமத்தில் மாரியம்மன் கோவில் அருகே விஜய் ரசிகர் மன்ற பேனர் வைத்துள்ளனர்    இந்த பேனர் மீது அதேபகுதியைச் சேர்ந்த சிகாமணி மகன் சந்தோஷ் (18) என்பவர் கல்லை எரிந்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை மாயவன் தட்டி கேட்டபோது ஆத்திரம் அடைந்த சந்தோஷ் அரிவாளால் மாயவனின் கழுத்து மற்றும் இடது கையில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இதில் படுகாயம் அடைந்த மாயவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மாயவன் கொடுத்த புகாரின் பேரில் சந்தோஷ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News