உள்ளூர் செய்திகள்

நாங்குநேரி அருகே போலீஸ்காரர் மீது தாக்குதல் - பெண்கள் உள்பட 4 பேருக்கு வலைவீச்சு

Published On 2022-12-30 09:09 GMT   |   Update On 2022-12-30 09:09 GMT
  • நாங்குநேரி அருகே உள்ள வெங்கட்ரங்கபுரத்தை சேர்ந்தவர் சுடலைமுத்து. இவரை திருட்டு வழக்கு தொடர்பாக விஜயநாராயணம் போலீசார் தேடி வருகின்றனர்.
  • வெங்கட்ராயபுரம்-செட்டிகுளம் சாலையில் சிதம்பரபுரம் விலக்கு அருகே சென்ற போது எதிரில் சுடலைமுத்து வருவதை கண்ட போலீசார் அவரை பிடித்தனர்.

களக்காடு:

நாங்குநேரி அருகே உள்ள வெங்கட்ரங்கபுரத்தை சேர்ந்தவர் சுடலைமுத்து. இவரை திருட்டு வழக்கு தொடர்பாக விஜயநாராயணம் போலீசார் தேடி வருகின்றனர். சம்பவத்தன்று விஜயநாராயணம் போலீஸ் நிலையத்தில் போலீசாராக பணிபுரியும், அந்தோணி பிரபு, சரவணக்குமார் ஆகியோர் தலைமறைவான சுடலைமுத்துவை கைது செய்ய அவரை தேடி சென்றனர்.

வெங்கட்ராயபுரம்-செட்டிகுளம் சாலையில் சிதம்பரபுரம் விலக்கு அருகே சென்ற போது எதிரில் சுடலைமுத்து வருவதை கண்ட போலீசார் அவரை பிடித்தனர். அவரிடம் விசாரித்து கொண்டிருந்த போது அங்கு வந்த சுடலைமுத்துவின் தாயார் சீதாலெட்சுமி, மனைவி பேச்சியம்மாள், அதே ஊரைச் சேர்ந்த சேர்மதுரை ஆகியோர் போலீஸ்காரர் அந்தோணிபிரபுவை கீழே தள்ளி தாக்கினர்.

மேலும் அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்தனர். அத்துடன் போலீஸ்காரர்கள் பிடித்து வைத்திருந்த சுடலைமுத்துவுடன் 3 பேரும் தப்பி ஓடி விட்டனர்.

இதுபற்றி போலீஸ்காரர் அந்தோணி பிரபு விஜயநாராயணம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நாககுமாரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இதுதொடர்பாக சுடலைமுத்து உள்பட 4 பேரையும் தேடி வருகிறார்.

Tags:    

Similar News