உள்ளூர் செய்திகள்

பெரும்பாக்கத்தில் ஏ.டி.எம்மை உடைத்து கொள்ளை முயற்சி

Published On 2022-07-17 09:33 GMT   |   Update On 2022-07-17 09:33 GMT
  • பெரும்பாக்கத்தில் ஏ.டி.எம். மையத்தில் இருந்து இன்று அதிகாலை அலாரம் ஒலித்தது.
  • பணம் இருந்த பெட்டியை கொள்ளையர்களால் உடைக்க முடியாததால் அதில் இருந்த பல லட்சம் ரூபாய் தப்பியது.

வேளச்சேரி:

பெரும்பாக்கம், நூக்கம்பாளையம் சாலையில் தனியார் வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. இன்று அதிகாலை 3.15 மணியளவில் ஏ.டி.எம். மையத்தில் இருந்து அலாரம் ஒலித்தது.

சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீஸ் கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருந்தது. பணம் இருந்த பெட்டியை கொள்ளையர்களால் உடைக்க முடியாததால் அதில் இருந்த பல லட்சம் ரூபாய் தப்பியது.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News