உள்ளூர் செய்திகள்

ஏ.டி.எம். எந்திரம் மீது கேட்பாரற்று கிடந்த 25 ஆயிரம் ரூபாய்- ரோந்து பணி போலீஸ்காரர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்

Published On 2023-09-04 11:23 GMT   |   Update On 2023-09-04 11:23 GMT
  • ஷெனாய்நகரில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். மைய பதிவேட்டில் கையெழுத்திட சென்றார்.
  • தமிழ்மணியின் நேர்மையான செயலை போலீஸ் அதிகாரிகள் பாராட்டினர்.

சென்னை:

சென்னை அமைந்தகரை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருபவர் தமிழ்மணி. நேற்று இரவு இவர் ரோந்து பணியில் ஈடுபட்டார். ஷெனாய்நகரில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். மைய பதிவேட்டில் கையெழுத்திட சென்றார்.

அப்போது ஏ.டி.எம். எந்திரத்தின் மேல் ரூ.25 ஆயிரம் பணம் இருந்ததை பார்த்தார். யாரோ பணத்தை ஏ.டி.எம். ல் எடுத்துவிட்டு அதனை அதன் மேலே வைத்து சென்றுள்ளார். கேட்பாரற்று அந்த பணம் அங்கு இருந்துள்ளது.

அதனை போலீஸ்காரர் தமிழ்மணி எடுத்து மனித நேயத்துடன் அமைந்தகரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். தமிழ்மணியின் நேர்மையான செயலை போலீஸ் அதிகாரிகள் பாராட்டினர்.

ஏ.டி.எம். மையத்தில் கிடந்த பணம் யாருடையது, யார் வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்டது என்பது பற்றி போலீசார் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பேசினர்.

Tags:    

Similar News