உள்ளூர் செய்திகள்

சாதனை படைத்த மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்ட காட்சி.

தடகள போட்டியில் தித்தியோப்பனஅள்ளி அரசு பள்ளி மாணவிகள் சாதனை

Published On 2022-10-07 09:30 GMT   |   Update On 2022-10-07 09:30 GMT
  • மாணவிகள் பல்வேறு பிரிவுகளில் சாதனை படைத்துள்ளனர்.
  • அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

பென்னாகரம்,

தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் நடைபெற்றது.

இந்த போட்டிகளில் பங்கேற்ற பென்னாகரம் ஒன்றியம், தித்தியோப்பனஅள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள் பல்வேறு பிரிவுகளில் சாதனை படைத்துள்ளனர்.

16 வயதுக்குட்பட்டோர் பிரிவில் நீளம் தாண்டுதலில் இந்த பள்ளியை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவி நவ்யா 3-வது இடமும், 300 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 8-ம் வகுப்பு மாணவி ஹரிணி 3-வது இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் முருகேசன், ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் ராமன், லட்சுமணன், ஊர் பொதுமக்கள், ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News