மாணவர் விடுதியை கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், பர்கூர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் திறந்து வைத்தனர்.
ஊத்தங்கரையில் கல்லூரி மாணவர் விடுதி - எம்.எல்.ஏ. திறந்து வைத்தனர்
- கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், பர்கூர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர்.
- சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் 35 பள்ளி விடுதிகள் மற்றும் 9 கல்லூரி விடுதிகள் என மொத்தம் 44 விடுதிகள் இயங்கி வருகிறது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை இந்திரா நகரில் பிற்படுத்தப்பட்டோர் நல தறை சார்பில் 100 மாணவர்கள் தங்கும் வகையில் அரசு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பல்தொழில் நுட்ப கல்லூரி மாணவர் விடுதி கட்டப்பட்டுள்ளது. அதை கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், பர்கூர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் பேசியதாவது:-
கிருஷ்ணகிரி மாவ ட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் 35 பள்ளி விடுதிகள் மற்றும் 9 கல்லூரி விடுதிகள் என மொத்தம் 44 விடுதிகள் இயங்கி வருகிறது.
கல்லூரி விடுதிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கை வேண்டி அதிகளவில் விண்ண ப்பங்கள் வரப்பெறுவதால் மாணவ, மாணவிகளின் நலன் கருதி, ஊத்தங்கரை தாலுகாவில் மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல தொழில்நுட்பக்கல்லூரி மாணவர் விடுதி 100 மாணவர்கள் எண்ணிக்கையுடன் தொடங்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது.
மாணவர்களுக்கு தினமும் புதிதாக மாற்றப்பட்ட உணவுப்பட்டியலின்படி, காலை மற்றும் இரவு உணவாக இட்லி, இடியாப்பம், பூரி, பொங்கல், சப்பாத்தி, தோசையும், மதிய உணவாக சாதம், சாம்பார், ரசம், கூட்டு, சிக்கன், மட்டன், முட்டையும், பண்டிகை கால சிறப்பு உணவுகளும் வழங்கப்படுகின்றது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், ஒன்றிய குழு தலைவர் உஷாராணி குமரேசன், ஒன்றிய குழு துணைத்தலைவர் சத்தியவாணி செல்வம், பேரூராட்சி தலைவர் அமானுல்லா, பேரூராட்சி துணைத்தலைவர் கலைமகள் தீபக், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.