உள்ளூர் செய்திகள்

ஆலோசனை கூட்டம் நடந்தது.

தஞ்சையில், ஆலோசனை கூட்டம்

Published On 2023-02-26 09:44 GMT   |   Update On 2023-02-26 09:44 GMT
  • செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும்.
  • பாரம்பரிய அரிசி, சிறுதானியங்களில் உணவு தயாரித்து வழங்கும் போராட்டம்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூரில் செறிவூட்டப்பட்ட அரிசிக்கு எதிரான பேரியக்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தங்க சண்முக சுந்தரம் தலைமை தாங்கினார்.

ஒருங்கிணைப்பாளர்கள் தனபதி , வேணு ராஜசேகர், தங்க குமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் , செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும்.

இதனை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அடுத்த மாதம் 15 ஆம் தேதி சத்து மிகுந்த பாரம்பரிய அரிசி மற்றும் சிறுதானியங்களில் உணவுகளை தயாரித்து வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் போராட்டம் நடத்த வேண்டும்.

பாரம்பரிய அரிசி சிறுதானியங்களை கட்டுபடியான விலையில் விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் மேல்மட்ட ஆலோசனை குழு உறுப்பினர்கள் வேலுமணி, ரவிச்சந்திரன், பாரதிதாசன், விக்னேஷ், அரு சீர் தங்கராசு, அருண் சுபாஷ், செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News