உள்ளூர் செய்திகள்

போச்சம்பள்ளி அருகே உள்ள பனங்காட்டூர் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் கூடுதல் மின்திறன் கொண்ட மின்மாற்றி திறப்பு விழாவில் ஜிங்கல்கதிரம் ஊராட்சி மன்றத் தலைவர் லட்சுமி சிவங்க ரன் குத்துவிளக்கேற்றி வைத்து தொடங்கி வைத்த காட்சி.

பனங்காட்டூர் துணை மின் நிலையத்தில் கூடுதல் திறன் கொண்ட மின்மாற்றி திறப்பு விழா

Published On 2022-11-08 15:50 IST   |   Update On 2022-11-08 15:50:00 IST
  • முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
  • மின்வாரிய அலுவலர்கள் ஊழியர்கள் பொதுமக்கள் என பலர் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பனங்காட்டூர் துணை மின் நிலையத்தில் போச்சம்பள்ளி சுற்றுவட்டார பொதுமக்களின் எதிர்கால மின் தேவையை கருத்தில் கொண்டு ரூ.2 கோடியே 9 லட்சத்து 64 ஆயிரம் திட்ட மதிப்பீட்டில் கூடுதல் திறன் கொண்ட மின் மாற்றியை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் புளியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.ஆர்.ரங்கநாதன், ஜிங்கல் கதிரம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி சிவசங்கர் மற்றும் பனங்காட்டூர் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் ஸ்டாலின் மற்றும் மின்வாரிய அலுவலர்கள் ஊழியர்கள் பொதுமக்கள் என பலர் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News