உள்ளூர் செய்திகள்

முகாமை எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

ஊரணிபுரத்தில், வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்

Published On 2023-04-11 09:55 GMT   |   Update On 2023-04-11 09:55 GMT
  • கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பரிசு பெட்டகம்.
  • தொழு நோயாளிகளுக்கு சுயஉதவி மருந்து பெட்டகம் மற்றும் காலணிகள்.

திருவோணம்:

திருவோணம் அருகே ஊரணிபுரத்தில் டாக்டர் கலைஞர் வருமுன் காப்போம் வட்டார சுகாதார திருவிழா சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

ஊரணிபுரம் ஜோதி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற மருத்துவ முகாமில் முன்னாள் மத்திய நிதித்துறை இணை அமைச்சரும் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ.எஸ்.பழனிமாணிக்கம், கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி மருத்துவ முகாமை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பரிசு பெட்டகம் , கண்ணொளி காப்போம் திட்ட மூலம் பள்ளி மாணவர்களுக்கு கண்ணாடி, தொழு நோயாளிகளுக்கு சுய உதவி மருந்து பெட்டகம் மற்றும் காலணிகள் போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மாவட்ட சுகாதார துணை இயக்குனர் நமச்சிவாயம் திட்ட விளக்க உரையாற்றி பேசினார்.

முகாமில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் திருஞானசம்பந்தம், திருவோணம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், மருத்துவமி ல்லா மேற்பார்வையாளர், துரைராஜ், சுகாதார ஆய்வாளர் பஷீர்முகமது, மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முடிவில் திருவோணம் வட்டார மருத்துவ அலுவலர் காயத்ரி நன்றி கூறினார்.

Tags:    

Similar News