உள்ளூர் செய்திகள்
மாரண்டஅள்ளி ஸ்ரீ சுப்பிரமணியசாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா
- பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
- கோவில் நிர்வாகிகளால் 500 -க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மாரண்டஅள்ளி,
தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது.
இதில் காலையில் சுப்பிரமணியசாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் சிறப்பு அபிஷேகமான பால், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், குங்குமம், தேன், தயிர், பன்னீர், இளநீர், மஞ்சள், உள்ளிட்ட 25 -திரவியங்கள் கொண்ட சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது.
இதில் மாரண்டஅள்ளி சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கோவில் நிர்வாகிகளால் 500 -க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.