உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

Published On 2022-09-11 09:36 GMT   |   Update On 2022-09-11 09:36 GMT
  • முன்னதாக அறிஞர் அண்ணா கலை, அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு வரவேற்பு விழா நடந்தது.
  • முன்னாள் மாணவர்கள் தங்களுடைய பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி ,

கிருஷ்ணகிரி போலுப்பள்ளி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் தனபால் தலைமை தாங்கினார். கல்லூரியின் வேதியியல் துறை தலைவர் சிவக்குமார் வரவேற்றார்.

விழாவில் கல்லூரி முதல்வர் பேசுகையில் அறிஞர் அண்ணா கலை, அறிவியல் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் உயர் பதவிகளை அடைந்துள்ளனர். தற்போது கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மத்திய அரசு தேர்வுகள், தமிழ்நாடு தேர்வாணையத் தேர்வுகளில் வெற்றி பெற போட்டித் தேர்வுகளுக்குரிய பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது என்று பேசினார்.

விழாவில் தொலைக்காட்சி நடிகர் பழனி கலந்து கொண்டு நல்ல நூல்களை வாசிப்பதன் மூலம் வாழ்க்கை வளமாகும் என்று பேசினார். நூலகர் தனசீலன் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர். முன்னாள் மாணவர்கள் தங்களுடைய பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். முடிவில் கரோலின் ரோஸ் நன்றி கூறினார்.

முன்னதாக அறிஞர் அண்ணா கலை, அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு வரவேற்பு விழா நடந்தது. கணினி அறிவியல் துறை தலைவி ராஜலட்சுமி வரவேற்றார். லட்சுமி சரஸ்வதி கல்வி அறக்கட்டளை அறங்காவலர் லாஸ்யா தொடக்க உரையாற்றினார். கல்லூரி தாளாளர் கூத்தரசன் வாழ்த்தி பேசினார். கல்லூரி முதல்வர் தனபால் சிறப்பு விருந்தினர்களை கவுரவித்தார். முடிவில் ஆங்கில துறை தலைவர் பிரகாஷ் நன்றி கூறினார்.

Tags:    

Similar News