உள்ளூர் செய்திகள்
ஓசூர் மிடுகர பள்ளியில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணியை பிரகாஷ் எம்.எல்.ஏ-மேயர் சத்யா தொடங்கி வைத்தனர்
- மிடுகரபள்ளியில் ரூ.25 லட்சம் மதிப்பில் புதிதாக தார் சாலை அமைக்கப்படவுள்ளது.
- நிகழ்ச்சியில், ஓசூர் எம்.எல்.ஏ. ஒய் பிரகாஷ், மாநகராட்சி மேயர் எஸ்.சத்யா ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.
ஓசூர்,
ஓசூர் மாநகராட்சியின் 37-வது வார்டுக்குட்பட்ட மிடுகரபள்ளியில் ரூ.25 லட்சம் மதிப்பில் புதிதாக தார் சாலை அமைக்கப்படவுள்ளது.
இதையொட்டி நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ஓசூர் எம்.எல்.ஏ. ஒய் பிரகாஷ், மாநகராட்சி மேயர் எஸ்.சத்யா ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.
இதில் ஆணையாளர் பாலசுப்பிரமணியன், துணை மேயர் ஆனந்தய்யா, மாநகராட்சி கவுன்சிலர்கள் சென்னீரப்பா, மாதேஸ்வரன் பகுதி செயலாளர் திம்மராஜ் மற்றும் கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.