ஓசூர் சிப்காட் தொழிற்பூங்காவில் சிப்காட் தொழில் புத்தாக்க மையம் திறப்பு
- ஓசூர் சிப்காட் பூங்காவில் தொழில் புத்தாக்க மையம் திறக்கப்பட்டது.
- கலெக்டர் நேரில் பார்வையிட்டார்.
ஓசூர்,
ஓசூர் சிப்காட் தொழிற்பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள சிப்காட் தொழில் புத்தாக்க மையத்தில் மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி குத்துவிளக்கேற்றி வளாகத்தை பார்வையிட்டார்.
நிகழ்ச்சிக்கு, ஓசூர் எம்.எல்.ஏ.ஒய்.பிரகாஷ் முன்னிலை வகித்தார். ஒசூர் சிப்காட் தொழிற்பூங்காவில் மொத்தம் 363 தொழிற்சாலைகள் உள்ளன.
மேலும் அந்த தொழிற்சாலைகள் ரூ. 12,655 கோடி முதலீடு செய்து அதில் 33,000 தொழிலாளர்கள் வேலைவாய்ப்பில் உள்ளனர். இந்த மையத்தின் நோக்கமானது தொழிற்சாலைகளுக்கு தேவையான தொழிலை மேம்படுத்துவதற்காக கோவையை சேர்ந்த "போர்ட்ஜ்" என்ற நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து தொழில்நுட்ப உதவிகளை வழங்கவுள்ளதா, கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், சிப்காட் திட்ட அலுவலர் வெங்கடேசன், உதவி பொறியாளர் ரேணுகா உள்ளிட்ட அதிகாரிகளும், தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.