உள்ளூர் செய்திகள்

வெவ்வேறு இடங்களில்குடும்பத் தகராறில் 2 பேர் தற்கொலை

Published On 2023-03-21 15:14 IST   |   Update On 2023-03-21 15:14:00 IST
  • 20-ம்தேதி மனமுடைந்த. பிரசாந்த் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • மனமுடைந்து காணப்பட்ட ராமச்சந்திரன் கடந்த 19-ம் தேதி விஷம் குடித்துள்ளார்.

கிருஷ்ணகிரி,  

திருவள்ளூர் மாவட்டம் வெள்ளந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 24 ).இவர் தற்போது ஓசூர் கம்பன் நகர் பகுதியில் குடியிருந்து வருகிறார்.

இவருக்கும் அவரது பெற்றோருக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் 20-ம்தேதி மனமுடைந்த. பிரசாந்த் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டிருந்தனர்.

இதே போல் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள சீபம் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 32). இவருக்கும் இவரது குடும்பத்தினருக்கும் குடும்ப பிரச்சினை இருந்து வந்தது.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட ராமச்சந்திரன் கடந்த 19-ம் தேதி விஷம் குடித்துள்ளார். இவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையாக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இது குறித்து உத்தினப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News