உள்ளூர் செய்திகள்

4 வயது மகனுடன் மனு கொடுக்க வந்த காயத்ரி.

கர்ப்பத்தை கலைக்குமாறு கூறி சப்-இன்ஸ்பெக்டர் மகளை தாக்கி கொலை மிரட்டல்

Published On 2022-09-21 08:52 GMT   |   Update On 2022-09-21 08:52 GMT
  • சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியைச் சேர்ந்த வர் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன். இவர் சேலம் விமான நிலைய பாதுகாப்பு பணியில் பணியாற்றி வருகிறார்.
  • இவர் கர்ப்பத்தை கலைக்குமாறு கூறி சப்-இன்ஸ்பெக்டர் கணவர்-குடும்பத்தினர் மீது புகார்.

ஓமலூர்:

சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியைச் சேர்ந்த வர் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன். இவர் சேலம் விமான நிலைய பாதுகாப்பு பணியில் பணியாற்றி வருகி றார். இவரது மனைவி கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக இறந்தார்.

பின்னர் 2 மாதங்கள் கழித்து இவரது மகன் விபத்தில் இறந்து விட்டார். இந்த நிலையில் தனது ஒரே மகள் காயத்ரியை முத்துநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த முத்து குமரன் என்பவருக்கு 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொடுத்தனர்.

காயத்ரிக்கு 4 வயதில் சர்வின் என்ற மகன் உள்ளான். முத்துக்குமரன் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கணவன்-மனைவிக்கிடையே அடிக் கடி தகராறு ஏற்பட்டது. இதனால் காயத்ரி கடந்த 3 ஆண்டுகளாக தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார்.

கடந்த மூன்று மாதங் களுக்கு முன்பு காயத்ரியை அவரது கணவர் வீட்டார் பேச்சுவார்த்தை நடத்தி அழைத்துச் சென்றனர். இதனிடையே காயத்ரி மீண்டும் கர்ப்பமானார். இதை அறிந்த அவரது கணவர் மற்றும் மாமனார், மாமியார் ஆகியோர் கர்ப்பத்தை கலைக்குமாறு கூறியுள்ளனர். அதற்கு காயத்ரி மறுத்துள்ளார்்.

இதனால் ஆத்திரமடைந்த கணவர் முத்துக்குமரன் காயத்ரியை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதன்காரணமாக அவர் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து ஓமலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என தெரிகிறது. இதையடுத்து கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீண்டும் மனு கொடுத்துள்ளார்.

மேலும் கணவர் கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகவும் மனுவில் கூறியுள்ளார். 

Tags:    

Similar News