உள்ளூர் செய்திகள்

முன்விரோதம் காரணமாக வாலிபர் மீது தாக்குதல்

Published On 2022-10-07 07:11 GMT   |   Update On 2022-10-07 07:11 GMT
  • இருவருக்குமிடையே இட பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.
  • தகராறில் மணிமாறன் அவரது மகன் உள்ளிட்டோர் பிரகலாதனை தாக்கியுள்ளனர்.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த காத்திருப்பு கிராமத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மணிமாறன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த பிரகலாதன் என்பவருக்கும் இடையே இட பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.

நேற்று மணிமாறன் அந்த இடத்தில் இருந்த வேலியை அகற்றியுள்ளார் . இதில் மணிமாறன் மற்றும் பிரகலாதன் இடையே தகராறு ஏற்பட்டது.

இந்த தகராறில் மணிமாறன் அவரது மகன் உள்ளிட்டோர் சேர்ந்து பிரகலாதனை கட்டையால் தலையில் தாக்கியுள்ளனர் .

இதில் பலத்த காயமடைந்த அவர் சீர்காழி அரசு மருத்துவமனை சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்த புகாரின் பேரில் பாகசாலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .

Tags:    

Similar News