உள்ளூர் செய்திகள்

தகட்டூர் பைரவர் கோவிலில் அஷ்டமி வழிபாடு

Published On 2022-12-17 08:35 GMT   |   Update On 2022-12-17 08:35 GMT
  • வடக்கே காசியிலும், தெற்கே தகட்டூரில் மட்டுமே பைரவர் மூலவராக அருள்பாலிக்கிறார்.
  • சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே வாய்மேட்டை அடுத்த தகட்டூரில் பைரவர் கோவில் உள்ளது. வடக்கே காசியிலும், தெற்கே தகட்டூரில் மட்டுமே பைரவர் மூலவராக அருள்பாலிக்கிறார்.

மேலும் பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் பைரவரின் அவதார திருநாளையொட்டி நேற்று பைரவருக்கு பால், இளநீர், திருநீறு, நெய், தேன், திரவியப்பொடி உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது. பின், பைரவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

முன்னதாக கோவிலின் எதிரே உள்ள மகா மண்டபத்தில் சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News