உள்ளூர் செய்திகள்
மது குடிக்க மகன் பணம் தராததால்விஷம் குடித்து தந்தை தற்கொலை
சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் முதியவர் மண்ணாங்கட்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்
கடலூர்:
கடலூர் அடுத்த நல்லாத்தூரை சேர்ந்த முதியவர் மண்ணாங்கட்டி (வயது 70). இவர் தனது மகனிடம் குடிப்பதற்கு பணம் கேட்ட போது கொடுக்கவில்லை. இதனால் கோபமடைந்த மண்ணாங்கட்டி, விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்தார்.
அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் முதியவர் மண்ணாங்கட்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.