உள்ளூர் செய்திகள்

2-வது மனைவிக்கு குழந்தை இல்லாததால் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்த கொத்தனார்

Published On 2022-07-29 08:12 GMT   |   Update On 2022-07-29 08:12 GMT
  • 2-வது மனைவிக்கு குழந்தை இல்லாததால் கொத்தனார் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
  • திருமணமாகி 10 வருடம் ஆன நிலையில் விவாகரத்து செய்துவிட்டார்.திருமணமாகி 10 வருடம் ஆன நிலையில் விவாகரத்து செய்துவிட்டார்.

கடலூர்:

கடலூர் அருகே அரிசிபெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 37). கொத்தனார். இவருக்கு கன்னிகா என்ற பெண்ணுடன் திருமணமாகி 10 வருடம் ஆன நிலையில் விவாகரத்து செய்துவிட்டார். பின்னர் சாமுண்டீஸ்வரி என்ற பெண்ணை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு 2-வது திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் சாமுண்டீஸ்வரிக்கு குழந்தை இல்லாத காரணத்தினால் தியாகராஜன் மன வருத்தத்தில் இருந்து வந்தார். சம்பவத்தன்று தியாகராஜன் மதுவில் விஷம் கலந்து குடித்தார் . இதில் மயக்கம் அடைந்த தியாகராஜனை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தியாகராஜன் உயிர் இழந்தார். இது குறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News