கலைத்திறன் போட்டியில் எஸ்.ஆர். பள்ளி மாணவர்கள் சாதனை
- குரோசா -2023 கலைத்திறன் போட்டியில் 40-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சார்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
- ஹிவஸ்திகா, சாதனா ஹரிணி ஆகியோர் ஜோடி நடனத்தில் 2-ம் இடம் பெற்றனர்.
சுரண்டை:
தூத்துக்குடி ஹோலிகிராஸ் பள்ளியில் குரோசா -2023 கலைத்திறன் போட்டி நடைபெற்றது. இதில் அழகர் பப்ளிக், பாரத் வித்யாமந்திர், கீதா மெட்ரிக், குட் ஷெப்பெர்டு, ஹோலிகிராஸ், எஸ்.ஆர். ஸ்கூல் ஆப் எக்சலன்ஸ் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சார்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்த கலைத்திறன் போட்டியில் எஸ்.ஆர்.ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் சிவ டமோக்னஸ் ராஜேந்திரா குழுவினர் மேற்கத்திய நடனத்தில் முதலிடம் பெற்றனர். மேலும் இதே பள்ளியை சார்ந்த ஹிவஸ்திகா, சாதனா ஹரிணி ஆகியோர் ஜோடி நடனத்தில் 2-ம் இடம் பெற்றனர்.
கணக்கதேஜஸ், சுபநந்தன் ஆகியோர் கணிதப்புதிர் போட்டியில் 3-வது இடம் பெற்றனர். குரோசா கலைத்திறன் போட்டியில் ஜீனியர் பிரிவில் எஸ்.ஆர். பள்ளி மாணவ, மாணவிகள் 3-வது இடம் பெற்றுச் சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற அணியினரை குழல்வாய்மொழி அம்மாள் சிவன் நாடார் அறக்கட்டளை நிறுவனத்தின் நிறுவனர் சிவ பபிஸ்ராம், பள்ளி செயலர் சிவ டிப்ஜினிஸ் ராம், முதல்வர் பொன் மனோன்யா மற்றும் தலைமை ஆசிரியர் மாரிக்கனி ஆகியோர் பாராட்டினர்.