உள்ளூர் செய்திகள்

மிளகாய் தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

Published On 2023-07-04 14:06 IST   |   Update On 2023-07-04 14:06:00 IST
  • ஏரியூர் போலீசார், சரவணனின் விவசாய நிலத்தில் சோதனை செய்தனர்.
  • 15- க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகள் அவரது மிளகாய் தோட்டத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஏரியூர்,

தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள சிடுவம்பட்டி, பேகியம் புதுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (30).

இவர் விவசாய நிலத்தில் கஞ்சா செடி பயிரிட்டு வருவதாக ஏரியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஏரியூர் போலீசார், சரவணனின் விவசாய நிலத்தில் சோதனை செய்தனர்.

அப்போது 15- க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகள் அவரது மிளகாய் தோட்டத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சரவணன் கைது செய்யப்பட்டார். அவர் பயிரிட்டிருந்த ஒன்றரை கிலோ எடையுடைய கஞ்சா செடிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News