உள்ளூர் செய்திகள்

அரியலூரில் உலக செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் - சின்னப்பா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

Published On 2022-07-24 14:59 IST   |   Update On 2022-07-24 14:59:00 IST
  • சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா, அங்கு வைக்கப்பட்டிருந்த செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு பதாகையில் கையெழுத்திட்டு இயக்கத்தை தொடக்கி வைத்தார்.
  • மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் அரசுப் பேருந்துகளில் செஸ் ஒலிம்பியாட் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டுவில்லைகளை ஒட்டப்பட்டது.

அரியலூர் :

உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுத்தில் வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி போட்டி குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அரியலூரில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் தொடங்கியது.

அரியலூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா, அங்கு வைக்கப்பட்டிருந்த செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு பதாகையில் கையெழுத்திட்டு இயக்கத்தை தொடக்கி வைத்தார்.

தொடர்ந்து, அவர் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு தன் புகைப்படம் எடுக்கும் அமைப்பில் புகைப்படம் எடுத்துக்கொண்டார். மேலும், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் அரசுப் பேருந்துகளில் செஸ் ஒலிம்பியாட் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டுவில்லைகளை ஒட்டினார்.

மேலும், அரியலூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள சாலையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வரையப்பட்ட செஸ் விளையாட்டு அமைப்பை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News