உள்ளூர் செய்திகள்

மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை

Published On 2022-07-30 09:46 GMT   |   Update On 2022-07-30 09:46 GMT
  • மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
  • சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சாத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் உத்திராபதி(வயது 55). கூலித் தொழிலாளி. இவர் சம்பவத்தன்று வழக்கம்போல் மது குடித்து விட்டு கீழே கிடந்துள்ளார். அவரது மனைவி பார்த்தபோது, அவர் ரத்த வாந்தி எடுத்துள்ளார். இது குறித்து கேட்டபோது, வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) மதுவுடன் கலந்து குடித்துவிட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து அவரை சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கீழப்பழூவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News