உள்ளூர் செய்திகள்
- திருநடன திருவிழாவை முன்னிட்டு பெண்கள் அக்னி சட்டி ஊர்வலம்
- மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஆண்டிமடம் சாலை அடிபல்ல தெருவில் உள்ள வட பத்ர காளியம்மன் கோவிலில் திருநடனத் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பெண்கள் அக்னிசட்டி, கரகங்கள் ஏந்தி ஜெயங்கொண்டம் முழுவதும் முக்கிய வீதிகளில் வீதி உலா வந்தனர். இதனை தொடர்ந்து அம்மனுக்கு பல வண்ண மலர்களால் அலங்கரித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களுடைய வேண்டுதல்களை நிறைவேற்றி அம்மனின் அருளை பெற்று சென்றனர்.