உள்ளூர் செய்திகள்

மூதாட்டியிடம் ரூ.4¼ லட்சம் மோசடி செய்த பெண் கைது

Published On 2022-10-20 12:30 IST   |   Update On 2022-10-20 12:30:00 IST
  • மூதாட்டியிடம் ரூ.4¼ லட்சம் மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டார்
  • கணவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே குணமங்கலம் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் பவானி (வயது 80). அதே பகுதியை சேர்ந்தவர் அருள்ஜோதி (47). இவரது மனைவி சரண்யா (42).

இவர்கள் 2 பேரும் பவானியின் பேத்தியின் திருமணத்திற்கு வைத்திருந்த ரூ.4 லட்சத்து 20 ஆயிரத்தை கடந்த 2019-ம் ஆண்டு முதல் 4 தவணைகளாக கடன் வாங்கியுள்ளனர். ஆனால் அந்த கடனை அவர்கள் திரும்ப கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் மூதாட்டி பவானி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, மூதாட்டி தனது பணத்தை திரும்ப கேட்டபோது அந்த தம்பதி வெளியூரில் தங்கிவிட்டதாக தெரிகிறது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மூதாட்டி பவானி இந்த சம்பவம் குறித்து விக்கிரமங்கலம் போலீசில் புகார் அளித்தார்.

இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் பணம் வாங்கி மோசடி செய்த சரண்யாவை கைது செய்தார். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள அவரது கணவர் அருள்ஜோதியை வலைவீசி தேடி வருகிறார்"

Tags:    

Similar News