உள்ளூர் செய்திகள்

நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

Published On 2022-08-20 09:44 GMT   |   Update On 2022-08-20 09:44 GMT
  • நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
  • சுங்கச் சாவடியை அகற்ற வலியுறுத்தி நடந்தது

அரியலூர்:

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே மணகெதியில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச் சாவடியை அகற்ற வலியுறுத்தி நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சிதம்பரம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உடையாா்பாளையம் அருகே மணகெதி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிக்கு அப்பகுதி கிராம பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அந்தச் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி நாம் தமிழா் கட்சியினா் சுங்கச்சாவடி முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.அப்போது, சுங்கச்சாவடி அமைந்துள்ள பகுதியைச் சுற்றிலும் உள்ள கிராமங்களைச் சோ்ந்த மக்கள் அன்றாட தேவைக்காகவும், விவசாயப் பயன்பாட்டுக்காகவும் சுமைஆட்டோ உள்ளிட்ட பல்வேறு நான்கு சக்கர வாகனங்களைப் பயன்படுத்தி வருகின்றனா். தினமும் சுங்கச் சாவடியை கடந்து வயல்பகுதிக்கு செல்லும் போதெல்லாம் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, இச்சுங்கச்சாவடியை அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினா்.

Tags:    

Similar News