உள்ளூர் செய்திகள்

கர்நாடகாவில் வெற்றி: அரியலூரில் காங்கிரசார் கொண்டாட்டம்

Published On 2023-05-14 06:17 GMT   |   Update On 2023-05-14 06:17 GMT
  • அரியலூரில் காங்கிரசார் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்
  • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காங்கிரசார் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும், இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர்

ஜெயங்கொண்டம்:

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காங்கிரசார் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும், இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில், மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News