உள்ளூர் செய்திகள்

அரியலூரில் வருகிற 1-ந்தேதி கிராம சபை கூட்டம்

Published On 2023-04-28 11:10 IST   |   Update On 2023-04-28 11:10:00 IST
  • அரியலூரில் வருகிற 1-ந்தேதி கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது
  • பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொண்டு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 கிராம ஊராட்சிகளிலும் வரும் 1-ந் தேதி (தொழிலாளர் தினத்தன்று) கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கிராம சபைக் கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்துத்துறை அலுவலர்கள், அந்தந்த பகுதிகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், சமுதாய அமைப்பு உறுப்பினர்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொண்டு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.


Tags:    

Similar News