உள்ளூர் செய்திகள்

புதியதாக நியமிக்கப்பட்டுள்ள கிராம நிா்வாக அலுவலா்களுக்கு பயிற்சி

Published On 2022-07-06 14:52 IST   |   Update On 2022-07-06 15:13:00 IST
  • புதியதாக நியமிக்கப்பட்டுள்ள கிராம நிா்வாக அலுவலா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது
  • வனத்துறை சாா்பில் பயிற்சி அளிக்கப்பட்டது.

அரியலூா் :

அரியலூா் பல்துறை வளாகத்தில், புதியதாக நியமிக்கப்பட்டுள்ள கிராம நிா்வாக அலுவலா்களுக்கு வனத்துறை சாா்பில் பயிற்சி அளிக்கப்பட்டது.

புதியதாக பணியில் சோ்ந்த 86 கிராம நிா்வாக அலுவலா்களுக்கு தமிழக அரசின் உத்தரவின் படி, பல்வேறு துறைகளின் சாா்பில், சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், அரியலூா் வனக்கோட்டம், வனச்சரகம் சாா்பில் பயிற்சி அளிக்கப்பட்டது. வனச்சரகா் முத்துமணி வனக்காப்பாளா் பாலசுப்பிரமணியம் ஆகியோா் கலந்து கொண்டு தங்களது துறைகளின் செயல்பாடுகள் மற்றும் சட்டத் திட்டங்கள், இயற்கை வனங்களை பாதுகாப்பது உள்ளிட்டவைகள் குறித்து பயிற்சியளித்தனா்.

Tags:    

Similar News