உள்ளூர் செய்திகள்

ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு

Published On 2022-06-25 09:18 GMT   |   Update On 2022-06-25 09:18 GMT
  • ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது
  • நான் முதல்வன் என்ற தலைப்பில் நடைபெற்றது

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் வகையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சியில் நான் முதல்வன் என்ற தலைப்பில் மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம், வேலைவாய்ப்பை எப்படி பெறுவது? என்ற தலைப்பில் 100 முதுகலை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கீழப்பழுவூர் மாவட்ட கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன முதல்வர் மொழியரசி, மாவட்ட கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர் ராஜபிரியன், உடையார்பாளையம் கல்வி மாவட்ட ஆய்வாளர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.

பள்ளி தலைமை ஆசிரியர் ராஜகுமார், உடற்கல்வி அலுவலர் ராஜேந்திரன், முதுகலை ஆசிரியர் இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பயிற்சியின் கருத்தாளர்களாக முதுகலை ஆசிரியர் இளஞ்செழியன், உதவி வேளாண்மை அலுவலர் மகேந்திரவர்மன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

ஜெயங்கொண்டம் தா.பழூர், ஆண்டிமடம் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நான் முதல்வன் என்ற தலைப்பில் அடுத்து என்ன படிக்கலாம் வேலை வாய்ப்பைப் பெறுவது எப்படி என எடுத்துரைத்தார்கள்.

Similar News