உள்ளூர் செய்திகள்

திருமானூரில் நாளை மின் தடை

Published On 2022-06-14 08:03 GMT   |   Update On 2022-06-14 08:03 GMT
  • திருமானூரில் நாளை 15-ந் தேதி பராமரிப்பு பணி காரணமாக மின் நிறுத்தம் செய்ய படுகிறது.
  • ஏலாக்குறிச்சி, தூத்தூர், குருவாடி, மேலராமநல்லூர், திருமழபாடி, இலந்தை கூடம், அரண்மனைக்குறிச்சி, சாத்தமங்கலம் ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை

அரியலூர்:

திருமானூரில் நாளை பராமரிப்பு பணி காரணமாக மின் நிறுத்தம் செய்ய படுகிறது

திருமானூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்தில் உள்ள சாத்தமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை 15-ந் தேதி (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.

இதனால் இங்கிருந்து மின் வினிேயாகம் பெறும் திருமானூர், ஏலாக்குறிச்சி, தூத்தூர், குருவாடி, மேலராமநல்லூர், திருமழபாடி, இலந்தை கூடம், அரண்மனைக்குறிச்சி, சாத்தமங்கலம் ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News