உள்ளூர் செய்திகள்

பஸ்சில் பயணம் செய்த காவலாளி மர்ம சாவு

Published On 2022-10-30 15:28 IST   |   Update On 2022-10-30 15:28:00 IST
  • ஞ்சாவூர் பூச்சந்தை பூக்கார விலா ரோடு தெருவை சேர்ந்தவர் பாரிவள்ளல்(வயது 60).
  • மீன்சுருட்டி அருகே உள்ள அணைக்கரை என்ற இடத்தில் அந்த பஸ் வந்தபோது பாரிவள்ளலுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

அரியலூர் ;

தஞ்சாவூர் பூச்சந்தை பூக்கார விலா ரோடு தெருவை சேர்ந்தவர் பாரிவள்ளல்(வயது 60). இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர்.

இதில் 2 மகள்களை தஞ்சாவூரிலேயே திருமணம் செய்து கொடுத்ததாக தெரிகிறது. இளைய மகள் தனது கணவருடன் சென்னையில் உள்ளார். அவர்களை பார்ப்பதற்காக தஞ்சாவூரில் இருந்து சென்னை செல்லும் அரசு பஸ்சில் அவர் பயணம் செய்ததாக தெரிகிறது.

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள அணைக்கரை என்ற இடத்தில் அந்த பஸ் வந்தபோது பாரிவள்ளலுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், சிறிது நேரத்தில் அவர் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து பஸ் டிரைவர் கொடுத்த புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜதுரை வழக்குப்பதிவு செய்து, பாரிவள்ளலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News