உள்ளூர் செய்திகள்

சிறுமியை காதலிக்க வற்புறுத்தியவர் கைது

Published On 2023-08-11 13:43 IST   |   Update On 2023-08-11 13:43:00 IST
  • ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை காதலிக்க வற்புறுத்தியவர் கைது
  • காரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்கு பதிந்து ஸ்டாலினை கைது செய்துசிறையில் அடைத்தனர்.

ஜெயங்கொண்டம் 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே முத்துசேர்வார்மடம் காலனி தெருவை சேர்ந்தவர் ஸ்டாலின் (வயது 21). இவர் தனது குடும்பத்தினருடன் நெருங்கி பழகி வந்த சிறுமியை காதலிப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி தனது தாயாரிடம் தகவல் தெரிவித்தார். அவர் ஸ்டாலினின் தாயை சந்தித்து அவரது மகனை கண்டிக்குமாறு கூறியுள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பள்ளியிலிருந்து சைக்களில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த சிறுமியை வழிமறித்த ஸ்டாலின்.காதலிக்க வற்புறுத்தி மிரட்டியுள்ளார். சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்கு பதிந்து ஸ்டாலினை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News