உள்ளூர் செய்திகள்

கடை வீதிக்கு ெசன்ற பெண் மாயம்

Published On 2022-07-06 14:43 IST   |   Update On 2022-07-06 14:43:00 IST
  • கடை வீதிக்கு ெசன்ற பெண் மாயமானார்.
  • அடிக்கடி குடும்பத்தகராறு

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள கோவிந்தபுத்தூர் காலனி தெருவை சேர்ந்தவர் சரவணன்(வயது 30). இவரது மனைவி இளமதி(21). கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2-ந் தேதி காலை இளமதி கோவிந்தபுத்தூர் கடைவீதிக்கு சென்று வருவதாக கூறிச்சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்காததால் இது குறித்து விக்கிரமங்கலம் போலீசில் சரவணன் புகார் அளித்தார். அதன்பேரில் விக்கிரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி வழக்குப்பதிவு செய்து இளமதியை தேடி வருகிறார்."

Tags:    

Similar News