உள்ளூர் செய்திகள்

வாலிபர் பலி

Published On 2023-07-24 14:55 IST   |   Update On 2023-07-24 14:55:00 IST
  • மரத்தில் இருந்து விழுந்த வாலிபர் பலியானார்
  • மாங்காய் பறித்து கொண்டிருந்த போது விபரீத முடிவு

அரியலூர்,

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி கீழத்தெருவை சேர்ந்தவர் கேசவன். இவருடைய மகன் இளையராஜா (வயது 28). இவர் கடந்த மே மாதம் 19-ந் தேதி மாலை தனது வீட்டின் அருகே இருந்த மரத்தில் ஏறி மாங்காய் பறித்து கொண்டிருந்தார். அப்போது மரத்தின் கிளை முறிந்து கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து அவரது அண்ணன் கலியமூர்த்தி, இளையராஜாவை மீட்டு திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி இளையராஜா நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தா.பழூர் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News