உள்ளூர் செய்திகள்

அரியலூரில் மாணவன் விஷம் குடித்து தற்கொலை

Published On 2022-08-25 15:23 IST   |   Update On 2022-08-25 15:23:00 IST
  • புதியரசன் விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
  • புதியரசன் கடந்த 23-ந் தேதி இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தை குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்துள்ளார்.

அரியலூர் :

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே சாத்தம்பாடி நடுத்தெருவை சேர்ந்தவர் சகுந்தலா (வயது 43). இவரது இளைய மகன் புதியரசன் (17). இவர் விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

கடந்த சில நாட்களாக புதியரசன் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, பள்ளிக்கு செல்லுமாறு அவரது தாயார் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில், மனமுடைந்த புதியரசன் கடந்த 23-ந் தேதி இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தை குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்துள்ளார்.

இதனை கண்ட உறவினர்கள் புதியரசனை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்தநிலையில், சிகிச்சை பலனின்றி புதியரசன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News