உள்ளூர் செய்திகள்

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களிடையே விளையாட்டு போட்டிகள்

Published On 2022-08-25 09:44 GMT   |   Update On 2022-08-25 09:44 GMT
  • அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே முதல் முறையாக விளையாட்டுப் போட்டிகள், தொடங்கியது.
  • கோகோ, வாலிபால், கூடைப்பந்து, தடகளம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, இதில் வெற்றிப் பெறும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டு விழாவின் போது, பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது

அரியலூர்,

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே முதல் முறையாக விளையாட்டுப் போட்டிகள், தொடங்கியது.

கல்லூரி முதன்மையர் முத்துகிருஷ்ணன், துணை முதன்மையர் சித்ரா ஆகியோரின் வழிகாட்டுதலின் படி, மாவட்ட விளையாட்டு மைதானத்தில், நடைபெற்ற இந்த போட்டியை தலைமை விடுதிகாப்பாளரும், அரசு மருத்துவருமான கொளஞ்சிநாதன் தொடக்கி வைத்தார்.

கோகோ, வாலிபால், கூடைப்பந்து, தடகளம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, இதில் வெற்றிப் பெறும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டு விழாவின் போது, பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை மருத்துவக் கல்லூரி விளையாட்டு பிரிவு மருத்துவர் ராஜேஷ்கண்ணா செய்திருந்தார்.

Tags:    

Similar News