தையல்நாயகி உடனுறை சனீஸ்வரன் கோவிலில் சிறப்பு வழிபாடு
- ஜெயங்கொண்டத்தில் உள்ள தையல்நாயகி உடனுறை சனீஸ்வரன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது
- திருவாசகம் முற்றேற்றுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் ராஜேந்திர சோழன் கட்டி வழிபட்ட ஐந்து சிவாலயங்களில் ஒன்றான தையல்நாயகி உடனுறை சென்னீஸ்வரர் கோவிலில் நேற்று முழுவதும் திருவாசகம் முற்றேற்றுதல் நடைபெற்றது.ராஜேந்திர சோழன் ஆயிரம் வருடங்களுக்கு முன் கங்கை கொண்ட சோழபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த போது சிவனின் ஐந்து முகத்திற்கு எடுத்துக் காட்டாக, நமசிவாயம் என்ற பஞ்சாக்ஷர ஐந்து எழுத்துக்களின் உதாரணமாக, அரியலூர் மாவட்டத்திலேயே பழமையான சிவாலயங்கள் ஆக விளங்கி வரும் ஜெயங்கொண்டம் பெரியநாயகி உடனுறை கழுமலைநாதர், சௌந்தரநாயகி உடனுறை பழமலைநாதர், சௌந்தரநாயகி உடனுறை சோழிஸ்வரர். தையல்நாயகி உடனுறை சென்னீஸ்வரர், அகிலாண்டேஸ்வரி உடனுறை ஆலீஸ்வரர் முடையார் என 5 சிவாலயங்களை கட்டினார். இக்கோவில்களில். தினமும் மாலை வேளையில் சைவ தமிழ் வேதம் என்று கூறும் சிவனடியார்கள் நாயன்மார்களில் நால்வர்களான. அப்பர், திருஞானசம்பந்தர், மணிக்கவாசகர், சுந்தரமூர்த்தி ஆகியோர்களின் பாடல்களை பாடி வழிபடுவது வழக்கம். தையல்நாயகி உடனுறை சென்னீஸ்வரர் கோவிலில் நேற்று சிவனடியார்கள் ஒன்று கூடி நேற்று காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை திருவாசகத்தின் அனைத்து பாடல்களை ஒன்றன்பின் ஒன்றாக பாடி திருவாசகம் முற்றேற்றுதலில் ஈடுபட்டனர்.