உள்ளூர் செய்திகள்

ஒன்றிய சிறப்பு பேரவை கூட்டம்

Published On 2022-06-18 15:07 IST   |   Update On 2022-06-18 15:07:00 IST
  • ஒன்றிய சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற்றது.
  • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்றது

அரியலூர் :

அரியலூர் மாவட்டம் திருமானூரில் தனியார் திருமண மண்டபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றிய சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற்றது. திருமானூர் ஒன்றிய செயலாளர் புனிதன் தலைமை வகித்தார். மாநில குழு உறுப்பினர் பேசும் போது,

கிராமப்புறங்களில் 100 நாள் வேலைத்திட்டம் தடைபடாமல் வழங்கவேண்டும், கொள்ளிடம் ஆற்றில் கதவணை கூடிய தடுப்பணை போர்க்கால அடிப்படையில் அமைக்கவேண்டும், சிறப்பு மண்டலம் நான்கு வழி சாலைக்காக கையகபடுத்தப்பட்ட விவசாய நிலங்களை திருப்பித் தரவேண்டும்,

நீர்நிலைப் பகுதிகளில் ஏழை எளிய மக்கள் குடிசைகளை அகற்றும் பொழுது அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து வீடுகள் கட்டித்தர வேண்டும், தமிழக அரசு அறிவித்த மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி அளிக்க வேண்டும். போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார் மாவட்ட குழு உறுப்பினர் சாமிதுரை நன்றி நன்றியுரை வழங்கினார்.

Tags:    

Similar News